தரம் 11, அலகு 3
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் எவ்வித இரசாயனப் பிணைப்புமின்றி கலந்திருக்கும்போது கலவை உருவாகிறது. இவை ஏகவினக்கலவை (உதாரணம்: உப்புக்கரைசல்) அல்லது ப்ல்லினக்கலவை (உதாரணம்: சேற்று நீர்) என இருவகைக் கலவைகளாகக் காணப்படலாம்

இவ்வலகில் முக்கியமாகப் பின்வருவன விளக்கப்படுகின்றன:
- கரைசல்: கரைப்பான் மற்றும் கரையம் சேர்ந்த கலவை. இதில் திணிவு/திணிவுச் சதவீதம், திணிவு/கனவளவுச் சதவீதம் மற்றும் மூலர் செறிவு ஆகியவற்றை கணிக்க மாணவர்கள் பழகுகின்றனர்.
- கலவைகளைப் பிரித்தல்: கலவையில் உள்ள கூறுகளைப் பிரித்தெடுக்க அவற்றின் கௌதிக இயல்புகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பகுதிப்பட் காய்ச்சி வடித்தல் (மசகு எண்ணெய் சுத்திகரிப்பு), நீராவி மூலம் காய்ச்சி வடித்தல் (கறுவா எண்ணெய்) மற்றும் கரைப்பான் பிரித்தெடுப்பு முறைகள் இங்கு விரிவாகக் கற்பிக்கப்படுகின்றன.
PDF Handout for this Unit


Leave a Reply