முதலாம் விதி (சடத்துவ விதி): புறவிசை ஒன்று பிரயோகிக்கப்படாத வரை, ஓய்விலுள்ள பொருள் ஓய்விலும், சீரான வேகத்தில் இயங்கும் பொருள் அதே நேர்கோட்டு இயக்கத்திலும் தொடர்ந்திருக்கும். இது ஒரு பொருளின் நிலையை மாற்ற மறுக்கும் சடத்துவம் பற்றி விளக்குகிறது.
இரண்டாம் விதி (F = ma): ஒரு பொருளின் உந்தமாற்ற வீதமானது அதன் மீது பிரயோகிக்கப்படும் சமப்படுத்தப்படாத விசைக்கு நேர்விகித சமனாகும். இதிலிருந்து விசை (F), திணிவு (m) மற்றும் ஆர்முடுகல் (a) ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு பெறப்படுகிறது.
மூன்றாம் விதி: ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு. விசை எப்போதும் சோடிகளாகவே தோன்றும் என்பதை இது உணர்த்துகிறது. உதாரணம்: ஏவுகணைத் தொழில் நுட்பம், துப்பாக்கி சுடுதல்.


Leave a Reply